வரும் 25 ஆம்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வரும் 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு நேரில் அளிக்கலாம்.
இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் நலத் திட்ட உதவிகள் வழங்க ஆவண செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.