கரூர் மாவட்டத்திற்குள்பட்ட 157 கிராம ஊராட்சிகளில் வருகிற சனிக்கிழமை (செப்.22) சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அக்.31ஆம் தேதி வரை சிறப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அனைத்து ஊராட்சிகளில் வருகிற சனிக்கிழமை மற்றும் அக்.6, 13 தேதிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
சம்பந்தப்பட்ட ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இதில் தவறாது பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.