கரூர்
பிஎஸ்என்எல் கோபுரத்தில் இயந்திரம் திருடிய சகோதரர்கள் கைது
தோகைமலை அருகே பிஎஸ்என்எல் செல்போன் கோபுரத்தில் இயந்திரத்தை திருடிய சகோதரர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தோகைமலை அருகே பிஎஸ்என்எல் செல்போன் கோபுரத்தில் இயந்திரத்தை திருடிய சகோதரர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தோகைமலையை அடுத்த காவல்காரன்பட்டியில் உள்ள செல்போன் கோபுரத்தில் உள்ள மின் இயந்திரம் கடந்த திங்கள்கிழமை மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதுகுறித்து குளித்தலை பிஎஸ்என்எல் இளநிலை பொறியாளர் பரதன்(32) தோகைமலை போலீஸில் புகார் செய்தார். இதுகுறித்த வழக்குப் பதிவு செய்த போலீஸார், செல்போன் கோபுரத்தில் மின் இயந்திரத்தை திருடியதாக திருச்சி லால்குடியைச் சேர்ந்த பூபதி மகன்கள் மகேஸ்வரன்(27), கோகுல்(18 ) ஆகியோரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து மின் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.