பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
கரூர் காந்கிராமம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பாலுசாமி(46). இவர் தனது பைக்கில் புதன்கிழமை இரவு கரூர் - கோவை சாலையில் ஆண்டாங்கோவில் மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது திடீரென பைக்கில் இருந்து நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.