உலக அமைதி தின உறுதிமொழியேற்பு

பரணி பார்க் சாரணர் மாவட்டத்தில் உலக அமைதி தினம் கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


பரணி பார்க் சாரணர் மாவட்டத்தில் உலக அமைதி தினம் கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பரணி பார்க் கல்விக்குழுமத்தின் தாளாளரும், பரணி பார்க் சாரணர் மாவட்ட முதன்மை ஆணையருமான எஸ்.மோகனரெங்கன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பரணி பார்க் கல்வி குழுமச்செயலரும், பரணி பார்க் சாரணர் மாவட்ட சாரணீய பிரிவு ஆணையருமான பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வரும், பரணி பார்க் மாவட்ட சாரண ஆணையரும், பாதுகாப்பு அமைச்சக தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினருமான சொ. ராமசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பரணி சாரண, சாரணீயர்கள் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தையும், தங்கள் வீட்டின் அருகில் உள்ள இடங்களையும் சுத்தம் செய்தனர். மேலும் சமாதானம் என் உரிமை எனும் வாசகங்களை கையில் ஏந்தி அமைதிப் பேரணியில் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் உலக சமாதான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உலக அமைதியை வலியுறுத்தும் வகையில் மாணவ, மாணவியர்களிடையே ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com