கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் அருகே பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி இறந்தார்.
வேட்டமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் மாறன்(50). கூலித்தொழிலாளி. இவர் சனிக்கிழமை தனது பைக்கில் புன்னம்சத்திரத்தில் இருந்து வடுகப்பட்டி நோக்கி பஞ்சங்குட்டை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.