கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், கால்நடைப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு கரூர் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தோருக்கான நேர்காணல் தேர்வு அரசு கலை கல்லூரி, தாந்தோனிமலை, கரூர் என்ற முகவரியில் வரும் 22-ம் தேதி முதல் 25-ம்தேதி வரை நடைபெற இருந்தது.
இந்த நேர்காணல் சென்னை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள், இயக்குநர் அலுவலக உத்தரவின்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.