கரூர் வள்ளுவர் அறிவியல் மேலாண்மைக் கல்லூரியின் நவநாகரிக தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவடைப்பு துறை சார்பில் குழந்தைகளுக்கான ஆடை அலங்கார அணி வகுப்பு போட்டிகள் கரூர் வள்ளுவர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் க. செங்குட்டுவன் தலைமை வகித்தார். கோவை கல்லூரியின் ஆடை வடிவமைப்பு துறைத் தலைவர் பச்சையப்பன் போட்டிகளை தொடக்கி வைத்தார். தொடர்ந்து குழந்தைகளுக்கான ஆடை அணி வகுப்பு போட்டிகள் நடைபெற்றன. இதில் 17 பள்ளிகளைச் சேர்ந்த 190 குழந்தைகள் பங்கேற்றனர். வள்ளுவர் கல்லூரியின் நிர்வாக அவை உறுப்பினர் தாரணி சிறப்புரையாற்றினார். வென்றோருக்கு முனைவர் சரவணக்குமார் பரிசு வழங்கினார். கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறைத் தலைவர் நதியா வரவேற்றார்.