எஸ்ஐ-க்கு மிரட்டல்; இருவர் கைது

எஸ்ஐ-க்கு கொலைமிரட்டல் விடுத்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.


எஸ்ஐ-க்கு கொலைமிரட்டல் விடுத்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீஸில் உதவி காவல் ஆய்வாளராக இருப்பவர் அப்துல்லா. இவர் வெள்ளிக்கிழமை இரவு கரூர் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது அங்கு நின்றுகொண்டிருந்த இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் சுரேந்திரன் (20), வெங்கமேட்டைச் சேர்ந்த விக்னேஷ் (23) ஆகியோர் அரசுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருந்தார்களாம். இதுதொடர்பாக அவர்களிடம் காவல் உதவி ஆய்வாளர் அப்துல்லா விசாரித்தபோது இருவரும் கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுதொடர்பாக அப்துல்லா அளித்த புகாரின்பேரில் கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து சுரேந்திரன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com