கார் மோதி இளம்பெண் சாவு

அரவக்குறிச்சி அருகே கார் மோதி பழனிக்கு பாத யாத்திரை சென்ற பெண் பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


அரவக்குறிச்சி அருகே கார் மோதி பழனிக்கு பாத யாத்திரை சென்ற பெண் பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த கருப்பையா மகள் செல்வி(27), ரெங்கசாமி மகள் ஹரி பிரியா(18). இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பாதயாத்திரை குழுவினருடன் பழனிக்கு செல்லும் வழியில் அரவக்குறிச்சி அடுத்த சீத்தப்பட்டி காலனி என்ற இடத்தில் அதிகாலையில் சென்றபோது அவ்வழியே வந்த கார் பக்தர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. 
இந்த விபத்தில் செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த ஹரி பிரியாவை உடன் சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com