கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கப்பிள்ளை(65). இவர் வெள்ளிக்கிழமை குளித்தலை செல்ல அரசுப் பேருந்தில் ஏறிச் சென்றார். பேருந்து கழூகூர் அடுத்த அக்காண்டி மேடு பிரிவு அருகே சென்றபோது திடீரென ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார். இதில் பேருந்தின் முன் படிக்கட்டு அருகே அமர்ந்திருந்த சங்கப்பிள்ளை தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தோகைமலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.