மனநலம் குன்றிய 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் மீது போக்ஸோ சட்டத்தில் போலீஸார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த சின்னம்ம நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவரின் 17 வயது மனநலம் குன்றிய மகளை அதே பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் (55) பலாத்காரம் செய்ததில், அவர் தற்போது 4 மாத கர்ப்பிணியாகவுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் சிவானந்தம் மீது குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிந்து சிவானந்தத்தைத் தேடி வருகிறார்கள்.