கரூர்: காங்கிரஸில் இணைந்த தமாகாவினர்

கரூரில் தமாகா கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் திங்கள்கிழமை இணைந்தனர்.

கரூரில் தமாகா கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் திங்கள்கிழமை இணைந்தனர்.
கரூர் மாவட்டம் மூக்கணாங்குறிச்சி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சிவசாமி தலைமையில் தமாகா கட்சியினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, மாவட்டத் தலைவர் சின்னசாமி ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். அப்போது அவர்கள் கூறியது: 
தமாகா தலைவர் ஜிகே.வாசன் எப்போது தேர்தல் வந்தாலும்,  மதச்சார்பற்ற கூட்டணியில் தான் இருப்பேன் எனக்கூறிவிட்டு தற்போது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர்ந்திருப்பது எங்களைப் போன்ற தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் தாயக் கழகமான காங்கிரஸில் இணைகிறோம் என்றனர். 
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com