கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பைக் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
தோகைமலை அருகே கொசூர் ஊராட்சிக்குட்பட்ட ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (57). கூலித்தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை இரவு கொசூரில் உள்ள நண்பர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு தோகைமலை - பாளையம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அவர் ஆத்துப்பட்டி பிரிவு ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தோகைமலை போலீஸார் கொசூர் கஸ்பாவைச் சேர்ந்த திருமுடி மகன் ஆறுமுகம் (27) என்ற இளைஞர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.