பெரம்பலூர், அரியலூரில் காங்கிரஸார் கொண்டாட்டம்

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்குஇனிப்புகளை வழங்கினர்.
மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. இதில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேச மாநிலங்களில் பா.ஜ.க.விடமிருந்து ஆட்சியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையப் பகுதியில் கட்சியின் மாவட்டத் தலைவர் டி. தமிழ்ச்செல்வன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
 மாவட்டப் பொதுச் செயலர் துரை. ராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் ஆசைத்தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கவேல், சிவாஜிமூக்கன், வட்டாரத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், மாவட்ட ஓ.பி.சி பிரிவுத் தலைவர் சாமிதுரை உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
அரியலூரில் :   அரியலூர் மாவட்டம், செந்துறையில்,  ஒன்றிய காங்கிரஸ் தலைவர்  செந்தில்குமார் தலைமையில் உடையார்பாளையம் பிரிவுச் சாலையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும்,பொதுமக்களுக்கு இனிப்புகளை  வழங்கினர்.
 அரியலூர்,ஜயங்கொண்டம்,திருமானூர்,ஆண்டிமடம்,மீன்சுருட்டி,பொன்பரப்பி, தா.பழூர்,திருமழபாடி, கீழப்பழுவூர்,உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com