பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 254 மனுக்கள் அளிக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கூட்டத்துக்குத் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்கள் பெற்றுக் கொண்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில், கடந்த மார்ச் 4 ஆம் தேதி குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஓகளூர் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் சக்தி (12), மகாராஜன் மகன் சந்தோஷ் (11) ஆகியோருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை குடும்பத்தினரிடம்ஆட்சியர் வழங்கினார்.