சிறந்த இளைஞர் மன்ற விருதுக்கு விண்ணப்பிக்கும் கெடு நீட்டிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நேரு யுவகேந்திரா மூலம் மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர்

பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நேரு யுவகேந்திரா மூலம் மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க நவ. 30 வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் ஹெலன்ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் ஆண்டுதோறும் இந்த அலுவலகத்துடன் இணைத்துகொண்டு, அரியலூரில் உள்ள தமிழ்நாடு அரசு சங்கங்கள் பதிவுச் சட்டத்தில் பதிவு செய்து சிறப்பான முறையில் சேவையாற்றி வரும் ஒரு இளைஞர் மன்றத்துக்கு, மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்ற விருதும், நற்சான்றிதழும் வழங்கப்படுகிறது.  அதன்படி, கடந்த நிதியாண்டில் (1.4.2017 முதல் 31.3.2018 வரை) சிறப்பான சேவைப்பணிகள் செய்துள்ள ஒரு மன்றத்தை மாவட்டத்தில் சிறந்த மன்றமாகத் தேர்வு செய்து, அந்த மன்றத்துக்கு விருது தொகையாக ரூ. 25 ஆயிரமும், நற்சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விண்ணப்பிக்க கடந்த நவ. 19 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நவ. 30  வரை விண்ணப்பிக்க காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. 
எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள மன்றத்தினர் பெரம்பலூர்- துறைமங்கலம் நான்கு சாலை, நேரு யுவகேந்திரா, மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பம் பெற்று,  பூர்த்தி செய்து சேவை புரிந்தமைக்கான தகுந்த ஆதாரங்களை இணைத்து  அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com