டென்னிஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்ற கோல்டன் கேட்ஸ் பள்ளி

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்ற கோல்டன் கேட்ஸ் பள்ளி மாணவர்களை செவ்வாய்க்கிழமை பாராட்டி வாழ்த்தினார் அதன் தாளாளர் ஆர். ரவிச்சந்திரன்.
கரூரில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பல்வேறு மாவட்ட வீரர்கள் பங்கேற்றனர். 
இரட்டையர் பிரிவில் பங்கேற்ற பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எஸ். சூர்யா, எஸ். விஜய் ஆகியோர் முதலிடம் பெற்று, தங்கம் வென்றனர்.  வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் ஆர். ரவிச்சந்திரன், முதன்மை முதல்வர் ஆர். அங்கயற்கண்ணி ஆகியோர் செவ்வாய்க்கிழமை பாராட்டி வாழ்த்தினர். ரெங்கராஜ், ஒருங்கிணைப்பாளர் ஆர். கோமதி, டென்னிஸ் பயிற்சியாளர் பாப்சிகரன், உடற்கல்வி இயக்குநர் ஆர். பிரேம்நாத், உடற்கல்வி ஆசிரியர் எஸ். அகிலாதேவி, உதவி பயிற்சியாளர் பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com