பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதி ஒன்றிய செயல்வீரர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், பாலக்கரையில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநிலத் தேர்தல் பணி குழு செயலரும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி பொறுப்பாளருமான வேளச்சேரி பி. மணிமாறன் தேர்தல் பணிகள் குறித்துப் பேசினார். இதில், மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, டாக்டர் செ. வல்லபன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ம. ராஜ்குமார், மாவட்ட அவைத் தலைவர் அ. நடராஜன், மாவட்ட பொருளாளர் செ. ரவிச்சந்திரன், நகரச் செயலர் எம். பிரபாகரன் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஒன்றிய செயலர் எஸ். அண்ணாதுரை வரவேற்றார்.