இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சீத்தாராமபுரத்தைச் சேர்ந்தவர் மணிவேல் மகள் விஜயசாந்தி (24). கருத்து வேறுபாடு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சீத்தாராமபுரத்தைச் சேர்ந்தவர் மணிவேல் மகள் விஜயசாந்தி (24). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வருகிறாராம். 
    இந்நிலையில், அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர் செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதில் விஜயசாந்தி தற்போது 4 மாத கர்ப்பமாக இருக்கிறாராம். தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு செல்வத்தை வற்புறுத்தியதில், அவர் மறுத்துவிட்டாராம். மேலும், அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் அவரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 10 நாள்களுக்கு முன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.  சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் திங்கள்கிழமை வந்த  விஜயசாந்தியைப் போலீஸார் தடுத்து கேனைப் பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து, ஆட்சியர் மனு அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com