பெரியார் பிறந்த நாளையொட்டி, பெரம்பலூரில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திராவிடர் கழக நிறுவனர் பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கை பரப்புச் செயலருமான ஆ. ராசா மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினார்.
இதில், திமுக மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா. துரைசாமி, நகரச் செயலர் எம். பிரபாகரன், திராவிடர் கழக பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சி. தங்கராசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் வீ. ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் : திராவிடர் கழகம் சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல் தலைமையில், ஒன்றிய தலைவர் சிவக்கொளுந்து உள்ளிட்டோர் அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் நகர செயலர் முருகேசன் தலைமையில் அக்கட்சியினரும், அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் துரை.மணிவேல் தலைமையில் அக்கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகராட்சி ஏஐடியுசி தொழிலாளர்கள் சார்பில் மாவட்ட பொதுச் செயலர் தண்டபாணி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. ஜயங்கொண்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழக மண்டல செயலர் காமராஜ் தலைமையிலும், திமுக சார்பில் நகர செயலர் கருணாநிதி தலைமையிலும் அந்தந்த கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.