பெரம்பலூர் மின் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூர் பகுதியில் வியாழக்கிழமை (செப். 20) மின் விநியோகம் இருக்காது.
சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்பநகர் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிமுதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வி. கரிகால்சோழன்.