பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் பகுதியில் திங்கள்கிழமை (செப். 24) மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார் சிறுவாச்சூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வி. கரிகால்சோழன். பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், ச.குடிகாடு, தெற்கு மாதவி, கொளக்காநத்தம், அயினாபுரம், சாத்தனூர், வரகுபாடி, நல்லூர், அ. குடிகாடு, அணைப்பாடி, பாடாலூர், இரூர், தெரணிபாளையம், தெரணி, திருவிளக்குறிச்சி, ஆலத்தூர் கேட் ஆகிய கிராமங்களில் திங்கள்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.