பெரம்பலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் ஆர்.டி. ராமச்சந்திரன் பேசியது: வரும் சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் அதிமுக வெற்றிபெற கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி, சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.