மோட்டார் சைக்கிள்கள் திருடிய கல்லூரி மாணவன் கைது

பெரம்பலூர், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய பொறியியல் கல்லூரி

பெரம்பலூர், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய பொறியியல் கல்லூரி மாணவனை, பெரம்பலூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
பெரம்பலூர்- துறையூர் சாலையில், செஞ்சேரி கிராமத்தில் பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை வழிமறித்து விசாரணை மேற்கொண்டதில், போலீஸார் சந்தேகப்படும் வகையில் பதில் அளித்தாராம். இதையடுத்து, அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று மேற்கொண்ட விசாரணையில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ஆக்கனூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை மகன் குமரேசன் (21) என்பதும், நாமக்கல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. 
மேலும், பெரம்பலூர், திருச்சி மாவட்டம் துறையூர் ஆகிய இடங்களில் மோட்டார் சைக்கிள்களைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து குமரேசனை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 4 மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குமரேசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com