பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் 3-வது நாளாக புதன்கிழமை

கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் 3-வது நாளாக புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி சேவை உரிமம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே மதரஸா சாலையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 மாவட்ட துணைத் தலைவர் ராஜப்பா, கிளை செயலர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com