எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் உள்ள அவரது உருவச்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கும், படத்துக்கும் பல்வேறு கட்சியினர் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், அக்கட்சியின் மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமையில், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன், பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
பின்னர், பொதுமக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியில், மாவட்ட அணி செயலர்கள் எம்.என். ராஜாராம், மா. வீரபாண்டியன், மாவட்ட பொருளாளர் பூவை த. செழியன், நகர செயலர் ஆர். ராஜபூபதி, ஒன்றியச் செயலர் என்.கே. கர்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
அமமுக சார்பில், அக்கட்சியின் பெரம்பலூர் ஒன்றிய செயலர் செல்வகுமார் தலைமையில், கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, அக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   
இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு அதிமுக, அமமுக, எம்.ஜிஆர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும், பொதுமக்களும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
அரியலூர்: அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை.எஸ். ராஜேந்திரன் தலைமையில் ஒற்றுமை திடலில் திரண்ட அதிமுகவினர், அங்கிருந்து மார்க்கெட், பிரதான கடைவீதி வழியாக ஊர்வலமாகச் சென்று பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தாமரை.எஸ்.ராஜேந்திரன் அன்னதானத்தை வழங்கினார். ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ.ராமஜெயலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் சங்கர், கள்ளங்குறிச்சி பாஸ்கர், அரசு வழங்குரைஞர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், எம்.ஜி.ஆர் கழகம், திராவிடர் கழகம், மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருமானூர்: திருமானூரிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக ஒன்றியச் செயலர் குமரவேல் தலைமையிலான நிர்வாகிகள் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். லட்சிய திமுக சார்பில் மாவட்ட செயலாளர் வினோத் ராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் செந்துறை,பொன்பரப்பி, ஜயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com