வகுப்பை மாற்றக்கோரி காத்திருப்புப் போராட்டம்

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து மாற்றி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வலியுறுத்தி, பெரம்பலூர் அருகே


தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து மாற்றி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வலியுறுத்தி, பெரம்பலூர் அருகே காத்திருப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். 
பெரம்பலூர் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, முன்னாள் ஊராட்சித் தலைவர் ரவி தலைமை வகித்தார். போராட்டத்தை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பிச்சமுத்து தொடக்கி வைத்து பேசினார். 
இதில், தமிழக அரசு 7 உட்பிரிவுகளையும் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும். இப்போது இடம் பெற்றிருக்கிற எஸ்.சி பட்டியலில் இருந்து விலக்கி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்தக் கோரிக்கையை, மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போராட்டம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com