பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எழுச்சித் தமிழர்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் எம். ராஜசேகரன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார் .
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (34) கட்சியின் மாநில அமைப்புச் செயலராக உள்ளார். 9 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் செய்து வரும் இவர், தனது வேட்பு மனுவை, பெரம்பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வே. சாந்தாவிடம் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அ. வெள்ளத்துரை செய்தியாளர்களிடம் கூறியது;
எங்கள் கட்சி 2013 ஆம் ஆண்டிலிருந்து பதிவு பெற்ற அரசியல் கட்சியாக செயலாற்றி வருகிறது. கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, பாஜகவுக்கு இணையான வாக்குகளை பெற்றோம்.
2019 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மக்களவைத் தொகுதிகளிலும், ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர் என்றார் அவர்.