பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.30 லட்சத்தை தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் பிரிவு பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, விழுப்புரத்தைச் சேர்ந்த முருகன் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 70 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல, ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் அருகே தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த விவசாயி வெங்கடாசலம், மக்காச்சோளம் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை ரூ. 1.60 லட்சத்தை உரிய ஆவணங்களின் எடுத்துச் சென்றபோது பறிமுதல் செய்தனர்.
பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ. 2.30 லட்சம் ரொக்கம், குன்னம் சட்டப் பேரவை தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் பி. மஞ்சுளாவிடம் ஒப்படைக்கப்பட்டு , பின்னர்அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.