பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பால் மாட்டுக் கடனாக ரூ. 10.50 லட்சம் கடன் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
சங்கத்தலைவர் அ.பழனியப்பன் பயனாளிகளுக்கு பால்மாடு வளர்த்தல் பணிக்காக 30 பால் மாடுகளுக்கான ரூ. 10.50 லட்சத்தை மத்திய கால கடனாக அதன் உரிமையாளர்களுக்கு வழங்கினார். மத்திய வங்கி சரக மேற்பார்வையாளர் சிதம்பரம், ஓரியண்டல் நிறுவன அலுவலர்குணசேகரன், சங்க செயலர் அ.செல்வம் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.