காரையூர், இலுப்பூரில் நவம்பர் 13 மின்தடை

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (நவ.13) மின்விநியோகம் இருக்காது.

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (நவ.13) மின்விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயபாலன் வெளியிட்ட அறிக்கை: மேலத்தானியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் காரையூர், எம்.உசிலம்பட்டி, மேலத்தானியம், கீழத்தானியம், சடையம்பட்டி, ஆலம்பட்டி, கொன்னையம்பட்டி, முள்ளிப்பட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.
விராலிமலை: அண்ணா பண்ணை  துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் வயலோகம், மாங்குடி, மண்வேளாம்பட்டி,  அண்ணா பண்ணை, குடுன்மியான்மலை, பரம்பூர், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, கீழக்குறிச்சி, தச்சம்பட்டி, இலுப்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் இலுப்பூர், ஆலத்தூர், பேயால், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிப்பட்டி, கொடும்பாலூர், பாக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் இருந்திரப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, புங்கினிபட்டி, பையூர், மாங்குடி, மருதம்பட்டி, ராப்பூசல், லெக்கனாப்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.13) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com