விராலிமலை அருகே சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
விராலிமலை அருகே தேத்தாம்பட்டியைச் சேர்ந்த திருப்பாலி மகன் கருப்பையா(67). விவாயியான இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டமநாயக்கன் பட்டி பிரிவு அருகே சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த கருப்பையா நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற விராலிமலை போலீஸார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், மதுரையைச் சேர்ந்த கார் ஓட்டுநரான மோகன் மகன் ராஜ்பிரபுவைக்(24) கைது செய்தனர்.