அரசுப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

உருவம்பட்டி அரசுப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 

உருவம்பட்டி அரசுப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியை சாந்தி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கருப்பையா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பரம்பூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சுயமரியாதை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக, ஜவாஹர்லால் நேரு புகைப்படத்திற்கு மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.வட்டார வளமைய பயிற்றுநர் த.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இடைநிலை ஆசிரியர் கு.முனியசாமி செய்திருந்தார். பெற்றோர் ஆசிரியர் கழக நியமன ஆசிரியர் நந்தினி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com