கறம்பக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
அரசின் இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்க வேண்டும். புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறக்க வேண்டும். இலவச பேருந்து பயண அட்டை வழங்க வண்டும்.
ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கறம்பக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி தலைமை வகித்தார்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தினர், கறம்பக்குடி போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலையச் செய்தனர்.