அறந்தாங்கி அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை ஆலங்குடி சட்டப் பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார்.
பாலகிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பலர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினஆர். நாகுடி வட்டார மருத்துவ அலுவலர் முகமது இத்ரியாஸ் தலைமையில் மருத்துவர்கள் கவின்குமார், தமிழமுது உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர்.
முகாமில், திமுக வடக்கு ஒன்றியப் பொருளாளர் சண்முகநாதன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் உத்தமநாதன், நிர்வாகிகள் கருப்பையா, பழனிமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.