மரம் அறுக்கும் கருவி விற்பனை தீவிரம்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை பகுதி பொதுமக்கள் தங்களது வீடு, வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும் மரங்களை மரம் அறுக்கும் கருவிகளை வாங்கி தாங்களாகவே அப்புறப்படுத்தி வருகின்றனர்.கஜா புயலால் கந்தர்வகோட்டை பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. மீட்புக் குழுவில் நிலவும் ஆள் பற்றாக்குறை காரணமாக சாலையில் கிடக்கும் மரங்கள் மட்டுமே அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வீடுகள், தெருக்கள் மற்றும் வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற போதுமான மரம் அகற்றும் கருவிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டுவந்தனர்.இதையறிந்த கோயமுத்தூரைச் சேர்ந்த நிறுவனம், கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரம் அறுக்கும் கருவிகளை ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகிறது. இதை பொதுமக்கள் வாங்கி தங்களது வீடு, வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.இருளில் மூழ்கிக் கிடக்கும் கந்தர்வகோட்டை:கடந்த 3 நாள்களாக மின்சாரம், குடிநீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை பகுதி பொதுமக்கள் தங்களது வீடு, வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும் மரங்களை மரம் அறுக்கும் கருவிகளை வாங்கி தாங்களாகவே அப்புறப்படுத்தி வருகின்றனர்.
கஜா புயலால் கந்தர்வகோட்டை பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. மீட்புக் குழுவில் நிலவும் ஆள் பற்றாக்குறை காரணமாக சாலையில் கிடக்கும் மரங்கள் மட்டுமே அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வீடுகள், தெருக்கள் மற்றும் வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற போதுமான மரம் அகற்றும் கருவிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டுவந்தனர்.
இதையறிந்த கோயமுத்தூரைச் சேர்ந்த நிறுவனம், கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரம் அறுக்கும் கருவிகளை ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகிறது. இதை பொதுமக்கள் வாங்கி தங்களது வீடு, வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இருளில் மூழ்கிக் கிடக்கும் கந்தர்வகோட்டை:
கடந்த 3 நாள்களாக மின்சாரம், குடிநீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com