கஜா புயல் காரணமாக விராலிமலை மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த 2 நாள்களாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்குப் பின்னர் படிப்படியாக சகஜ நிலைக்குத் திரும்பி வருகிறது.
கடந்த நவ. 16 ஆம் தேதி வீசிய கஜா புயலால் கடந்த 3 நாள்களாக விராலிமலை பகுதியில் மின்சாரம் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட வணிகர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில், விராலிமலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்குப் பின்னர் படிப்படியாக சகஜ நிலை திரும்பி வருகிறது.