ஆலங்குடி மகளிர் காவல்நிலையத்தை இடமாற்றம் செய்யக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் நாடியம்மை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆலங்குடியில் இருந்து 3 கி.மீ தொலைவுக்கு மேல் உள்ள பாச்சிக்கோட்டையில் பாதுகாப்பற்ற நிலையில் இயங்கிவரும் மகளிர் காவல்நிலையத்தை நகர் பகுதிக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
மாவட்டச் செயலாளர் டி.சலோமி, தலைவர் சுசீலா, ஒன்றியத் தலைவர் ஸ்டெல்லாமேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.