குறைதீர் கூட்டத்தில் 283 மனு பெறப்பட்டன

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 283 மனுக்கள் பெறப்பட்டன.

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 283 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு நாள் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி தலைமை வகித்தார். இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை, சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 283 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com