பொன்னமராவதியில் பிரதமர் நரேந்திர மோடியின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் திங்கள்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற விழாவில் பூமரத்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவிற்கு பாஜக நகரத் தலைவைர் எம்.சேதுமலையாண்டி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் எம்.குமரன், உள்ளாட்சிப் பிரிவு மாவட்டத் தலைவர் சி.பாலமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ராம்ஜி, நகரப் பொருளாளர் எஸ்.ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.