கந்தர்வகோட்டை அருகே பெண்ணிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கந்தர்வகோட்டை அருகேயுள்ள கொத்தகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளச்சாமி மகள் மாரியம்மாள் (28). இவர் அருகிலுள்ள கல்லாக்கோட்டை மருந்துக் கடை ஊழியர். இவர் திங்கள்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு ஓட்டப்பாலம் என்ற இடத்திலிருந்து தனது ஊருக்குச்+ செல்லும் பிரிவுச் சாலையில் சென்றபோது பைக்கில் வந்த அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் துரைச்சாமி (26) தனது வாகனத்தில் ஏறுமாறு கூறியுள்ளார்.
மாரியம்மாள் மறுக்கவே, அவரது கையைப்பிடித்து அருகிலுள்ள தைல மரக்காட்டுக்குள் இழுத்துசெல்ல முயன்றார். அப்போது அந்தப் பெண் கூச்சலிடவே அருகிலிருந்தோர் ஓடிவந்ததால் துரைச்சாமி அப்பெண்ணை விட்டு ஓடிவிட்டார். இதுகுறித்து மாரியம்மாள் கந்தர்வகோட்டை போலீஸில் அளித்த புகாரின்பேரில் மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் அ . ஆறுமுகம் உத்தரவின்பேரில் வழக்குப் பதிந்து துரைச்சாமியை கைது செய்தனர்.