கந்தர்வகோட்டையில் தூய்மை உறுதியேற்பு

கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை உறுதியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை உறுதியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்.2 வரை நடைபெற உள்ள தூய்மையே சேவை இயக்கத்தில் முழுமையாக அர்ப்பணித்து அதன் மூலம் சுகாதாரமான புதிய பாரதத்தை உருவாக்க உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் வெங்கடேசபிரபு, மாகலிங்கம் ஆகியோர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள் மற்றும் இதர பொது இடங்களில் தூய்மையைக் கடைபிடிப்போம்.  வீடுகளில் இரட்டை உறிஞ்சு குழிகளுடன் கூடிய கழிவறைகளை கட்டுவதுடன், அவ்வாறு கட்டாதவர்களையும் கட்டச் செய்து திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களும், நகரங்களும் உருவாக்கப் பாடுபடுவோம் என்று உறுதிமொழியேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com