பொன்னமராவதி வலையபட்டி மெய்யப்பா வள்ளியம்மை காஞ்சி சங்கர வித்யாலயா மெட்ரிக் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
காந்திசிலை அருகே தொடங்கிய பேரணி அண்ணா சாலை, பேருந்து நிலையம், நாட்டுக்கல் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே வந்து வலையபட்டியில் நிறைவுற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பிளாஸ்டி தீமைகள், சுற்றுப்புறத் தூய்மையின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் அடங்கிய பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனர்.
பள்ளி முதல்வர் ச.ஜீவானந்தம், நிர்வாக அலுவலர் பாண்டியன், துணை முதல்வர் எம். மகாலெட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.