பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷம்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் புரட்டாசி சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது.


பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் புரட்டாசி சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது.
விழாவையொட்டி நந்திக்கு16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரம் முடித்து தீபாராதனை நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சிவாய நம கோஷத்துடன் வழிபட்டனர்.
அதுபோல புதுப்பட்டி சிவன் கோயில், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர், மேலைச்சிவபுரி மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர், திருக்களம்பூர் கதலீஸ்வரர், பரியாமருதுபட்டி பரியாமருந்தீஸ்வரர், அம்மன்குறிச்சி மீனாட்சி சொக்கநாதர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கந்தர்வகோட்டை கோதண்டராமர் கோயிலில் புரட்டாசி முதல் சனியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் , பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com