விராலிமலை ரீட் பவுட்ண்டேசன் சார்பில் பஞ்சாலை மற்றும் பனியன் கம்பெனிகளில் பணிபுரியும் வளரிளம் பெண்கள், குழந்தைகள் உரிமைகள் தொடர்பான கருத்தரங்கம் சனிக்கிழமை விராலிமலையில் நடைபெற்றது.
கருத்தரங்கை ரீடு நிறுவன இயக்குநர் சி. ராமதாஸ் தொடங்கி வைத்து பேசினார். வழக்குரைஞர் ஆ.ஜெயந்தி, மேரி ஆன் த வே நிறுவன அமலா, எல். ராஜேஸ்கண்ணா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கருத்தரங்கில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்டங்கள்,குழந்தைகளின் உரிமைகள் குறித்து விளக்கப்பட்டது.
இதில் 50-க்கும் மேற்பட்ட வளரிளம் பெண்கள் கலந்து கொண்டனர். ரீடு பவுண்டேசன் நிறுவன நோபீஸ்மேரி நன்றி கூறினார்.