மொபெட் சக்கரத்தில் சேலை சிக்கி  பெண் சாவு

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
திருமயம் அருகேயுள்ள ராராபுரத்தை சேர்ந்தவர் சண்முகம் மனைவி பாப்பு (60). இவர் தனது பேத்தி சுவேதாவுடன் (19)  தனது மகள் வீடு உள்ள மொரண்டாம்பட்டிக்கு இரு சக்கரவாகனத்தில் சென்றார்.
கீரங்குடி விளக்கு அருகே சென்றபோது பாப்புவின் சேலை இருசக்கர வாகன சக்கரத்தில் சிக்கியதில்  நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். 
தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாப்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து காரையூர் போலீஸார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com