அன்னவாசல் அருகே மனைவி இறந்த துக்கத்தில் பூச்சி மருந்து குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
அன்னவாசல் அருகே வயலோகத்தைச் சேர்ந்தவர் சேவுகன்(32). விவசாயியான இவர், கிளியூரைச் சேர்ந்த தாய்மாமன் மகள் தேவியை 8 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து வசித்து வந்தார்.
இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக சில ஆண்டுக்கு முன்பு தேவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அதிலிருந்து மன உளைச்சலில் இருந்த சேவுகன் சில நாள்களுக்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கினார். அருகில் இருந்தவர்கள் சேவுகனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேவுகன் இறந்தார்.
இதுகுறித்து அன்னவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.