காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை

பொன்னமராவதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பொன்னமராவதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, வட்டார காங்கிரஸ் தலைவர் கே.செல்வராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சக்தி செயலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், பொன்னமராவதி ஒருங்கிணைப்பாளர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சக்தி செயலி-யில் காங்கிரஸ் தொண்டர்கள் இணைப்பது தொடர்பாகவும்,  வரும் மக்களவை  தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் சிறப்பாக செயல்படவும் ஆலோசனை வழங்கப்பட்டது. 
வட்டார துணைத்தலைவர் வைத்தியநாதன், பொருளர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சித்தலைவர்கள் ச.சோலையப்பன், கிரிதரன், நிர்வாகிகள் மணி, சரவணபவன்மணி, அடைக்கலம், சின்னத்தம்பி, சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com