கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டம்

தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தின்  அவசர செயற்குழு கூட்டம்  சங்க அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது

தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தின்  அவசர செயற்குழு கூட்டம்  சங்க அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.  
கூட்டத்தில்  சங்கத்தின் நிறுவனத் தலைவர்  இரா.போசு மற்றும் மாநில பொதுச்செயலாளர்  எஸ்.செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், பிரதமரின் பி.எம்.  கிஸான் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளைத் தேர்வு செய்வது குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தெளிவான வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும். 
என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது. இதன் நகல் வருவாய்த் துறை அமைச்சர், வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது.  மாவட்டச் செயலாளர் எம்.உலகநாதன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com